நோன்பின் கட்டாயக் கடமைகள், அதில் செய்ய அனுமதிக்கப்பட்டவை, ஸுன்னத்துக்கள்

3056

நோன்பின் கட்டாயக் கடமைகள், அதில் செய்ய அனுமதிக்கப்பட்டவை, ஸுன்னத்துக்கள், வெறுக்கத்தக்கவை, அதனை முறிப்பவை

நோன்பின் கட்டாயக் கடமைகள்

முதல் கடமை : அதிகாலை (பஜ்ர்) உதயமாகியதில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கக் கூடியவற்றிலிருந்து தவிர்ந்திருத்தல்

அல்லாஹ் கூறுகின்றான் : {பஜ்ர் நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு நேரம் என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்} [அல்குர்ஆன் 2 : 187.)].

வெள்ளை நூல், கறுப்பு நூல் என்பதன் பொருள் – வெள்ளை என்பது பகல், கறுப்பு என்பது இரவாகும்.

இரண்டாவது கடமை : நிய்யத் (மனதால் எண்ணுதல்).

இவ்வாறு நோன்பை முறிக்கக் கூடியவற்றிலிருந்து தவிர்ந்திருப்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதை நாடுதல் வேண்டும் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின் றன, ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கின்றது»(புஹாரி முஸ்லிம்).

நோன்பில் நிய்யத் வைத்தல்

கடமையான நோன்பாக இருந்தால் பஜ்ர் உதயமாக முன்னர் இரவிலேயே நிய்யத் வைத்தல் அவசியமாகும். மேலதிகமான நோன்பாக இருந்தால் அவ்வாறு அவசியமில்லை, சூரியன் உச்சிக்கும் வரும் வரை நோன்பை முறிக்கக் கூடிய எதனையும் செய்யாவிட்டால் பகலிலும் நிய்யத் வைத்து நோன்பைத் தொடரலாம். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «ஒரு தினம் நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் உண்பதற்கு ஏதும் உண்டா? என வினவினார்கள். நாம் “இல்லை” என்றோம். அப்படியாயின் “நான் நோன்பிருக்கின்றேன்” என்றார்கள்.» (ஆதாரம் முஸ்லிம் 1154).

நோன்புடன் செய்ய அனுமதிக்கப் பட்டவை

1. குளித்தல், உஷ்னத்தைத் தணிக்க நீரில் மூழ்குதல்.

2. உமிழ்நீர், இருமல்நோய்ச் சளி போன்றவற்றை விழுங்குதல்

3. தொண்டையினுள் செல்லாத வகையில் நாவினால் மாத்திரம் உணவுகளை ருசி பார்த்தல்

4. வாசனைகள், நறுமணங்களை நுகர்தல்

நோன்பாளி மிஸ்வாக் குச்சி அல்லது பற்தூரிகை பயன்படுத்தல்

நோன்பு காலங்களில் எந்நேரத்திலும் பல் துலக்கலாம். அது மத்தியாணத்திற்கு முன்னரும் பின்னரும், மிஸ்வாக் குச்சி ஈரமாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும் சரி. எனினும் மிஸ்வாக் அல்லது பற்தூரிகை ஈரமனாதாக இருந்தால் தொண்டையினுள் ஏதும் செல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும், அவ்வாறு சென்றால் நோன்பு முறிந்து விடும்.

நோன்பின் ஸுன்னத்துக்கள்

1. ஸஹர் உணவு உண்ணதல், அதனை பஜ்ரு நெருங்கும் வரை பிற்படுத்துதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் பரகத் உள்ளது»(புஹாரி முஸ்லிம்).

ஒரு சிறு கவளம் உணவு, அல்லது தண்ணீர் மிடர் உட்கொள்வதன் மூலமும் ஸஹர் உண்ட நன்மையைப் பெறலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «ஸஹர் உணவு உண்பது பரகத் ஆகும், ஒரு தண்ணீர் மிடர் குடிப்பதன் மூலம் சரி அதனை விட்டுவிட வேண்டாம். ஏனெனில் அல்லாஹ்வும் அவனது வானவர்களும் ஸஹர் உண்வு உண்பவர் மீது ஸலவாத் கூறுகின்றனர். »(ஆதாரம் அஹ்மத்).

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் : «நாம் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஸஹர் உணவு உண்டுவிட்டு தொழுகைக்காக எழுந்து சென்றோம். அவ்விரண்டிற்கும் இடையில் எவ்வளவு நேரம் இருந்தது? என அனஸ் (ரலி) அவர்கள் வினவ, “ஐம்பது வசனங்கள் ஓதும் நேரஅளவு” என (ஸைத்) பதிலளித்தார்கள்.»
(புஹாரி முஸ்லிம்).

அதான் கூறும்போது பருகுதல்

தனது கையில் குடிபானம் இருக்கும் போது பஜ்ர் அதான் ஒலிக்கக் கேட்டால் அவருக்கு கையிலிருப்பதைக் குடித்து முடிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «பாத்திரம் கையிலிருக்கும் போது உங்களில் ஒருவர் அதான் ஒலிக்கக் கேட்டால் தனது தேவை முடியும் வரை அப்பாத்திரத்தை வைக்க வேண்டாம்»
(ஆதாரம் அபூதாவுத்).

பஜ்ருடைய நேரம் வந்துவிட்டதா என்று சந்தேகத்தில் இருப்பவருக்குத் தான் இந்த நபிமொழி என அறிஞர்கள் கூறியுள்ளனர். பஜ்ர் உறுதியாகிவிட்டால் அதன் பின் அவருக்கு உண்ண, பருக முடியாது. அவ்வாறு செய்தால் நோன்பு முறிந்து விடும். பிறிதொரு நாளில் அதனை நோற்க வேண்டும்.

அதான் கூறும்போது பருகுதல்

2. நோன்பு திறப்பதை துரிதப்படுத்துதல்

சூரியன் அஸ்தமித்தது உறுதியானால் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «நோன்பு திறப்பதை அவசரப் படுத்தும் கலமெல்லாம் மக்கள் நலவிலேயே இருந்து கொண்டிருக்கின் றார்கள்» (ஆதாரம் அபூதாவுத்).

கனிந்த பேரீத்தம் பழங்கள், அது கிடைக்கா விட்டால் உலர்ந்த பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்டு நோன்பு திறப்பது விரும்பத்தக்கது. அதுவும் கிடைக்காவிட்டால் சில தண்ணீர் மிடர்கள் கொண்டு திறக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழ முன்னர் சில கனிந்த பேரீத்தம் பழங்களை உண்டு நோன்பு திறப்பார்கள். கனிந்த பேரீத்தம் பழங்கள் கிடைக்காவிட்டால் உலர்ந்த
(ஒரு மிடர் குடி நீர்) பேரீத்தம் பழங்களை உண்பார்கள். அதுவும் கிடைக்காவிட்டால் சில மிடர் தண்ணீர் குடிப்பார்கள்.» (ஆதாரம் திர்மதி) கிடைக்காவிட்டால் நோன்பு திறப்பதாக உள்ளத்தால் நினைத்துக் கொள்ள வேண்டும்.

3. நோன்பு திறக்கும் போது துஆக் கேட்டல்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறந்தால் பின்வருமாறு கூறுவார்கள்: «தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்»(ஆதாரம் அபூதாவுத்).பொருள் : தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகி விட்டது இன்ஷாஅல்லாஹ்.

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: «நிச்சயமாக நோன்பாளிக்கு அவன் நோன்பு திறக்கும் போது ஒரு பிரார்த்தனை இருக்கின்றது, அது தட்டப்பட மாட்டாது»(ஆதாரம் இப்னு மாஜா).

தவறுதலாக நோன்பு திறந்தவர்

சூரியன் அஸ்தமித்து விட்டதாகவோ, பஜ்ர் இன்னும் உதயமாகவில்லை என்றோ தவறுதலாக நினைத்துக் கொண்டு நோன்பு திறந்தால் அவர் அதனை மீட்டத் தேவையில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்: {நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றமில்லை, எனினும் உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது உங்கள் மீது குற்றமாகும்}[அல்குர்ஆன் 33 : 05].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (நிச்சயமாக அல்லாஹ் தவறையும், மறதியையும், பலவந்தப்படுத்தப்பட்டு செய்வதையும் எனது சமூகத்திற்கு மன்னித்து விட்டான்)
(ஆதாரம் இப்னு மாஜா).

4. மானக்கேடான செயல், வீண்களியாட் டங்களை விட்டுவிடுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் (கெட்ட வார்த்தை, உடலுறவு, அதோடு தொடர்பானவைகளையும் குறிக்கும்) பேச வேண்டாம், சத்தமிட்டு தர்கிக்க (சண்டையிடுதல், கூச்சலிடுதல்.) வேண்டாம், அவருக்கு யாராவது ஏசினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பளி” என்று கூறட்டும்.».(புஹாரி முஸ்லிம்).

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: «பொய்யான பேச்சையும், பொய்யான செயலையும் விடாதவர் தம் உணவையும் பாணத்தையும் விடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை».(ஆதாரம் அபூதாவுத்)

5. வணக்க வழிபாடுகளை அதிகப் படுத்தல்

அல்குர்ஆன் ஓதுதல், அல்லாஹ்வை நினைவுகூர்தல், தராவீஹ் தொழுதல், லைலதுல் கத்ர் இரவை உயிர்ப்பித்தல், முன்பின் ஸுன்னதுக்கள் தொழுதல், தர்மம், அறம், நல்வழிகளில் செலவளித்தல் போன்றவற்றை அதிகப்படுத்துதல், நோன்பு திறக்க உதவுதல், உம்ராச் செய்தல் போன்ற இக்காலங்களில் செய்யும் சிறந்த வணக்கங்களாகும். ஏனெனில் ரமழானில் செய்யப்படும் வணக்கங்களுக்கு நன்மைகள் பன்மடங்காக்கப்படுகின்றன. இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் –«நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடைவள்ளலாக இருந்தார்கள், ரமழான் மாதத்தில்தான் அதிகமாக தர்மம் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதம் முழுதும் சந்திப்பார்கள் அப்போது நபியவர்கள் அல்குர்ஆனை அவர்களிடம் ஓதிக் காண்பிப்பார்கள். அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது காற்றை விட வேகமாக நன்கொடை வழங்குவார்கள்» (ஆதாரம் புஹாரி).

6. ரமழானில் இறுதிப் பத்து தினங்களில் முழுமுயற்சியுடன் வணக்கங்களில் ஈடுபடல்.

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «ரமழானின் இறுதிப் பத்து தினங்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் தனது வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, (“வேட்டியை வரிந்து கட்டுவார்கள்“ என்பது வழமையைக் காண வணக்கத்தில் அதிக முயற்சி செய்வதைக் குறிக்கும் சிலேடையான வார்த்தை. பெண்கள், மற்றும் உடலுறைவை விட்டும் ஒதுங்கியிருப்பதைக் குறிக்கும் மிக நாகரீகமான வார்த்தை என்றும் இதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.) அவ்விரவுகளை, உயிர்ப்பிப்பார்கள், தனது மனைவியரையும் எழுப்பி விடுவார்கள்(வணக்க வழிபாடுகளின் முக்கியத்துவம்)» (ஆதாரம் புஹாரி).

நோன்பின் வெறுக்கத்தக்கவை

1. வுழூவின் போது வாய் கொப்பளிப்பதிலும், மூக்கினுள் நீர் செலுத்துவதிலும் அளவுகடந்து செய்தல்.

அதன் மூலம் சிலவேளை நீர் உள்ளே செல்ல வாய்புள்ளது என்பதற்காகவே வெறுக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «நீங்கள் நோன்பாளியாக இல்லாத வரை மூக்கினுள் நன்றாக நீர் செலுத்துங்கள்» (ஆதாரம் அபூதாவுத்).

2-இச்சையுடன் மனைவியை முத்தமிடல்

உணர்ச்சி அதிகமாகும் என்றோ, விந்து வெளிப்படும் என்றோ அஞ்சினால் நோன்பாளி தனது மனைவியை இச்சையுடன் முத்தமிடுவது வெறுக்கத் தக்கதாகும். உணர்ச்சிகளைத் தூண்டும் அனைத்துக் காரியங்களையும் விட்டுத் தூரவாகி இருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும். தனது நோன்பு பாலாகும் எனும் அச்சம் இல்லாவிடில் முத்தமிடுவது குற்றமில்லை. ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:«நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தன் மனைவியரை கட்டியணைப்பார்கள், முத்தமிடுவார்கள், அவர்கள் உங்களில் தம் உடல் உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்(அவருடைய தேவை)»
(புஹாரி முஸ்லிம்) இதனால் வயோதிபரன்றி வாலிபர்கள் மேற்கண்ட காரியங்களில் நோன்புடன் ஈடுபடுவது வெறுக்கத்தக்கதாகும். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார் கள்: «ஒரு மனிதர் நபியவர்களிடம் நோன்பாளிக்கு மனைவியைக் கட்டி யணைப்பது பற்றிக் கேட்ட போது அனுமதித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டதும் தடுத்தார்கள். அவர்கள் அனுமதியளித்தவர் வயோதிபராகவும், தடுத்தவர் வாலிபராகவும் இருந்தார்.கள்.»
(ஆதாரம் அபூதாவுத்).

நோன்பை முறிப்பவை

1. ரமழான் பகலில் வேண்டுமென்றே உண்ணல், பருகல்

அல்லாஹ் கூறுகின்றான்: {பஜ்ர் நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு நேரம் என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்} [அல்குர்ஆன் 2 : 187].

தொழிலுக்காக நோன்பை விடுதல்

போறணைகள், மற்றும் கடின வேலைகள் செய்வோரும் பிறரைப் போன்றுதான், அவர்களுக்கும் தமது தொழிலுக்காக நோன்பை விட முடியாது.

சில குறிப்புக்கள்

மறதியாக உண்டால், பருகினால் அவருடைய நோன்பு முறியமாட்டாது, நினைவு வந்ததும் நிறுத்திக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «தான் ஒரு நோன்பாளி என்பதை மறந்து ஒருவர் உண்டால், அல்லது பருகினால் அவர் தனது நோன்பை பூரணப்படுத்தட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்தான் உணவும், பாணமும் புகட்டியுள்ளான்”. அவருடைய நோன்பு முறியமாட்டாது» (ஆதாரம் முஸ்லிம்).

ஊட்டச்சத்தாக வாய்வழியாக உள்ளே செல்லும் அனைத்தும் நோன்பை முறிக்கும். உதாரணமாக ஊட்டச்சத்து ஊசிகளைக் குறிப்பிடலாம். இன்சுலின் போன்றவற்றின் மூலம் நோன்பு முறிய மாட்டாது. ஏனெனில் அது உணவாக செலுத்தப்படுவதில்லை.

தேவைக்காக வாய்வழியாக செலுத்தப் படும் மருத்துவ கெமராக்கள், ஆஸ்துமா ஸ்ப்ரே போன்றவையும் நோன்பை முறிக்காது.

சுர்மா, கண், காதுக்குள் செலுத்தப்படும் சொட்டுமருந்துகளும் நோன்பை முறிக்க மாட்டாது. ஏனெனில் இதன் மூலம் நோன்பு முறியும் என்பதற்கான ஆதாரம் ஏதும் கிடையாது, அத்துடன் கண் வழமையாக ஊட்டச்சத்து செலுத்தப் படும் வழியல்ல. அதே போன்றுதான் காதும். எனினும் மூக்கினுள் வடிக்கப் படும் சொட்டு மருந்தைத் தவிர்ந்து கொள்வது நல்லது, ஏனெனில் அதன் சுவை உணரப்பட வாய்ப்புள்ளது, மட்டுமன்றி நபியவர்கள் நோன்டன் மூக்கினுள் அதிக நீர் செலுத்துவதைத் தடையும் செய்துள்ளார்கள். (ஆதாரம் திர்மிதி)

சுர்மா இடுவது நோன்பை முறிக்காது.

இன்சுலின் ஊசி நோன்பை முறிக்காது

ஊட்டச்சத்து மருந்து நோன்பை முறிக்கும்

ஆஸ்துமா ஸ்ப்ரே நோன்பை முறிக்காது

உணவல்லாத வேறொன்றை, ஸிகரட் போன்ற தீங்கு விளைவிக்கும் ஒன்றை உட்கொண்டாலும் நோன்பு முறிந்து விடும். ஏனெனில் அவை வாய்வழியாகத் தான் உட்செலுத்தப்படுவதுடன், உண்ணல் பருகலில் அடங்குகின்றன.

தூசி, பற்களுக்கிடையில் இருக்கும் சிறு உணவுப் பொருட்கள் போன்ற தவிர்ந்து கொள்ள முடியாதவற்றால் நோன்பு முறிய மாட்டாது.

புகைபிடித்தல் ஸிகரட் நோன்பை முறிக்கும்

பற்களுக்கிடையிலுள்ள உணவுகளால் நோன்பு முறியாது.

2. உடலுறவு கொள்ளல்

அல்லாஹ் கூறுகின்றான்: {நோன்பு கால இரவில் உங்கள் மனைவியிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது}[அல்குர்ஆன் 2 : 187].

எனவே நோன்பு நோற்ற நிலையில் உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும். அத்தினத்தை அவர் கழாச் செய்வதுடன், பாரிய குற்றப்பரிகாரம் ஒன்றும் அவர் மீது கடமையாகின்றது. அது ஓர் அடிமையை உரிமையிடுவது, கிடைக்காவிட்டால் இரு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பது, முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பது. அபூஹரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். நபியவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?” என வினவ, “நான் ரமழானில் (நோன்பு நோற்ற நிலையில்) மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “உன்னால் ஓர் அடிமையை உரிமையிட முடியுமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க உன்னால் முடியுமா?“ என்றார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் முடியுமா?” என்று கேட்க, அதற்கும் அவர் “இல்லை” என்றார். நபியவர்கள் “அமர்வீராக” என்றதும், அவர் அமர்ந்தார். நபியிடம் பேரீத்தம் பழம் நிறைந்த ஒரு பெரிய (அதிக நிறையுள்ள) கூடை கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “இதைப் பெற்று தர்மம் செய்வீராக” என்றார்கள். அம்மனிதர், “இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்ய வேண்டும்? என்று கேட்க, நபியவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்து விட்டு, “உனது குடும்பத்திற்கே உணவளியும்” என்றார்கள்»(புஹாரி முஸ்லிம்).

மேற்கண்ட நபிமொழியில் உள்ள ஒழுங்குமுறைப் படியே பரிகாரம் செலுத்த வேண்டும். நோன்பு நோற்க சக்தியில்லாவிட்டால் தான் தர்மம் செய்ய வேண்டும், அடிமை உரிமையிட வசதியில்லாவிட்டால் தான் நோன்பு நோற்க வேண்டும்.

இதில் சம்பந்தப்படும் பெண்ணைப் பொறுத்தவரையில் அவளும் கணவுடன் இவ்விடயத்தில் இணங்கிச் சென்றால் அவளும் பரிகாரம் நிறைவேற்ற வேண்டும். மாறாக கணவன் அவளை நிர்ப்பந்தித்தால் நோன்பு முறிந்து விடும், அதனைக் கழாச் செய்ய வேண்டும், ஆனால் குற்றப்பரிகாரம் செலுத்தத் தேவையில்லை.

• நோன்பு முறியும் விடயத்தில் உடலு றவைப் போன்றுதான் சுயஇன்பம் அனுபவித்து, அல்லது தொடுதல், முத்தமிடுதல் மூலம் சுயநினைவுடன் விந்து வெளியேற்றுதலும் நோன்பை முறித்து விடும். ஏனெனில் நோன்பின் நோக்கத்துடன் முரண்படும் இச்சையைச் சார்ந்தது. குற்றப் பரிகாரமின்றி கழா மாத்திரம் செய்ய வேண்டும். குற்றப்பரிகாரம் ஆதாரபூர் வமாக உடலுறவுக்கு மாத்திரம் தான் விதியாக்கப்பட்டுள்ளது.

• கட்டியணைத்தல், தொடுதல், உடலுறவு பற்றி சிந்தித்தல் மூலம் மதனநீர் வெளிப்பட்டால் நோன்பு செல்லுபடி யாகும். இச்சந்தர்ப்பத்தில் நோன்பு முறியும் என்பதற்குத் தெளிவான ஆதாரமில்லை.

• தூக்கத்திலோ அல்லது நோயினால் இச்சையின்றி நோன்பு முறிய மாட்டாது. ஏனெனில் அதில் அவரது சுயவிருப்பம் ஏதும் கிடையாது.

• பஜ்ருக்கு முன்னர் உடலுறவு, விந்து வெளிப்படுதல் மூலம் குளிப்பு கடமையான நிலையில் அதிகாலையில் எழுந்தாலும் நோன்பு செல்லுபடியா கும். எனினும் ஸுபஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்காக குளித் துக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ர் வேளையை அடைவார்கள். பின்பு குளித்து, நோன்பு நோற்பார்கள். (ஆதாரம் : புஹாரி 1926, முஸ்லிம் 1109.)

3. வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்

இரைப்பையிலிருந்து உணவு, பாணங் களை வேண்டுமென்றே வாய்வழியாக வெளியேற்றுவதே வாந்தியாகும். எனினும் தனது கட்டுப்பாட்டை மீறி வாந்தி வந்தால் நோன்பு முறியாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாருக்கு வாந்தி வருகின்றதோ அவர் கழாச் செய்யத் தேவையில்லை, வேண்டு மென்றே வாந்தியெடுப்பவர் கழாச் செய்ய வேண்டும். (ஆதாரம் : அபூதாவூத் 2380, திர்மிதீ 720.)

4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம்

சூரியன் அஸ்தமிக்க சில வினாடிகள் முன்னரும் சரி மாதவிடாய், அல்லது பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும், அதனைக் கழாச் செய்ய வேண்டும்.

பயனுள்ள ஒரு தகவல்

குறிப்பிட்ட கருவிகளைப் பயன்படுத்தி உடலிலிருந்து இரத்தம் வெளியேற்றும் முறையான “ஹிஜாமத்” நோன்பை முறிக்க மாட்டாது என்பதே வலுவான கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் நோன்பாளிக்கு முத்தமிடுவதையும், ஹிஜாமத்தையும் அனுமதி வழங்கினார் கள் என அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் உடல் பலவீனப்படுவதைக் கருதி அவ்வாறு செய்வதைத் தவிர்ந்து கொள்வது நன்று. “நீங்கள் நோன்பாளி ஹிஜாமத் செய்வதை வெறுக்கக் கூடிய வர்களாக இருந்தீர்களா?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப் பட்ட போது “உடல் பலவீனத்திற்காகவன்றி நாம் அதனை வெறுக்கவில்லை” என்றார்கள்.

காயம், பல் பிடுங்குதல், மூக்கிலிருந்து இரத்தம் வழிதல், பரிசோதனைக்காக ஊசி மூலம் இரத்தம் எடுத்தல், இரத்த தானம் செய்தல் போன்றவற்றால் வெளிப்படும் இரத்தம் நோன்பை முறிக்காது.