ஜனாஸா தொழுகை

12174

ஜனாஸா தொழுகை

மையத்தில் செயலாற்றுதல்

மரணிப்பதற்குரிய அடையாளம் தென்பட்டால் அவருக்கு லாயிலாக இல்லல்லாஹ் என்ற கலிமாவை ஞாபகப்படுத்துவது அவசியமாகும். நபியவர்கள் கூறினார்கள் «மரணத்தருவாயில் இருப்பவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

அப்போது அவர் மரணித்தால் அவரது கண்களை மூடி, ஆடையால் மறைத்து அவருக்கு தொழுகை நடாத்தி, அடக்கம் செய்வதற்குரிய வேலைகளில் அவசரமாக தயாராக வேண்டும்

மையத்தை குளிப்பாட்டுதலும் அடக்கம் செய்தலும்

மையத்தை கழுவி, கபனிட்டு, அதனை சுமந்து சென்று, தொழுகை நடாத்தி, நல்லடம் செய்வது பர்ழு கிபாயாவாகும். அவ்வாறு செய்தால் ஏனையவர்கள் பாவியாவதில் இருந்து தப்பத்துக் கொள்வர்.

மையத்தை குளிப்பாட்டுவதன் சட்டங்கள்

1- நேர்மையாளர், உண்மையாளர், குளிப்பின் சட்டங்களை அறிந்தவர் என அறியப்பட்டவரையே மையத்தை குளிப்பாட்ட தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

2- மரணித்தவர் குளிப்பாட்ட யாரையாவது வஸியத் செய்திருப்பின் அவரை முற்படுத்த வேண்டும். பின்னர் குளிப்பின் சட்டங்கள் தெரிந்த நெருங்கியவர்கள் செய்வர். அவ்வாறில்லாது போனால் குளிப்பின் சட்டங்களை அஅறிந்தவறை முற்படுத்த வேண்டும்.

3- ஆண் மையத்தை ஆண்களும், பெண் மையத்தை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். அவர்களுடைய கணவன்மார்கள் அவர்களை கழுகுவார்கள். ஆயிஷா ரழி அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள். «எனக்கு முன்னர் நீ மரணித்தால் உன்னை குளிப்பாட்டி கபனிட்டு தொழுவித்து, பின்னர் அடக்கம் செய்வேன்»(ஆதாரம் இப்னு மாஜா)

என்றாலும் ஏழு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை ஆணும் பெண்ணும் குளிப்பாட்டலாம். என்றாலும் ஒரு முஸ்லிம் காபிரான ஆண்கள், பெண்களை குளிப்பாட்ட முடியாது. அவர்களது ஜனாஸாக்களை தூக்க முடியாது. அதற்கு கபனிடவும் முடியாது. அவர்களுக்கு தொழுகை நடத்தவும் முடியாது. அவர் நெருக்கமாக இருந்தாலும் சரியே. உதாரணம் தந்தை.

4- யுத்த்த்தில் ஷஹீதாக்கப்பட்டவரை குளிப்பாட்ட தேவையில்லை. அவருக்கு கபனிடவோ, தொழுவிக்கவோ அவசியமில்லை. அனால் அவருடைய அடையுடன் அடக்கம் செய்ய வேண்டும்.

5- ஒரு குழந்தை பூரண உடலை அடையாமல் பெண்ணின் உடலில் இருந்து விழுந்தால் அது நான்கு மாதமான ஆணாக அல்லது பெண்ணாக இருந்தால் அதனை குளிப்பாட்டி கபனிட்டு தொழுகை நடாத்த வேண்டும். ஏன்னில் நான்கு மாதத்தின் பின்னர் அது மனிதனாக மாறும்.

6- குளிப்பாட்டும் நீர் சுத்தமான ஆகுமான நீராக இருப்பது நிபந்தனையாகும்.மறைவான இடத்தில் ஏனையவர்களது தொடர்புகள் இல்லாத வண்ணம் கழுவ வேண்டும்.

மையத்தை குளிப்பாட்டும் முறை

1- குளிப்பாட்டுவதற்காக மையத்தை கட்டிலில் வைத்தல். பின்னர் அதனுடைய அவ்ரத்தை மறைத்தல். அறையை பார்த்தவராக மையத்தின் ஆடையை நீக்குதல்

2- குளிப்பாட்டும் போது கையில் ஒரு துணியை வைத்திருப்பது ஆகுமானதாகும்.

3- பின்னர் குளிப்பாட்டுபவர் மையத்தின் தலையை உயர்த்தி வயிற்றில் கைளை நுழைத்து பிசைவார். அப்போது மையத்தின் முன் பின் துவாரங்களால் வெளிப்படுவதை கழுவ வேண்டும்.

4- குளிப்பிற்கான நீயத்தை வைத்தவராக

5- தொழுகைக்காக வுழுச் செய்வது போல மையத்திற்கு வுழுச் செய்ய வேண்டும். நாசிக்கு நீர் செலுத்தும் இடத்தில் வாயையும் மூக்கையும் மஸஹ் செய்தால் பொதுமானது.

6- இலந்த நீரால், சவர்க்காரம் அல்லது அது போன்றவற்றால் மையத்தின் தலையையும் தாடியையும் கழுவ வேண்டும்.

7- வலப்புற உறுப்பை கழுவி பின்னர் இடப்புற உறுப்பை கழுவ வேண்டும். பின்னர் ஏனைய உறுப்பை குழுவி பூரணப்படுத்த வேண்டும்.

8- இறுதியாக கற்பூரத்தால் சுத்தம் செய்வது ஆகுமானது.

9- மையத்தை துடைத்தல்.

10- பெண்களின் முடியை பின்னால் வைத்து முடிய வேண்டும்.

கவனிக்க

- ஒரே தடவையில் சுத்தமடைந்தால் ஒரே தடவையில் கழுவுவது வாஜிபாகும். அல்லது சுத்தமாகும் வரையில் கழுவதானால் மூன்று முறை கழுவுவதே சுன்னத்தாகும்.

- தண்ணீர் கிடைக்காத சந்தர்ப்பமாக அல்லது உடல் துண்டிக்கப்பட்ட சந்தர்பமாக இருப்பின் மண்ணால் தயம்ம் செய்ய வேண்டும்.

- மையத்தை குளிப்பாட்டுபவர் குளிப்பது ஆகுமானதாகும்.

குளிப்பாட்டுவதற்காக மையத்தை கட்டிலில் வைத்தல்

குளிப்பாட்டும் போது கையில் ஒரு துணியை வைத்திருப்பது

குளிப்பாட்டுபவர் மையத்தின் தலையை உயர்த்துதல்

வயிற்றில் கைளை நுழைத்து பிசைதல்

தொழுகைக்காக வுழுச் செய்வது போல மையத்திற்கு வுழுச் செய்யதல்

இலந்த நீரால் மையத்தின் தலையையும் தாடியையும் கழுவுதல்

வலப்புற உறுப்பை கழுவி பின்னர் இடப்புற உறுப்பை கழுவுதல்

மையத்தை துடைத்தல்

மையத்தை கபனிடுதல்

1- ஆண்களுக்கு கபன் மூன்று துணிகளில் இடப்படும். அது உடலைப் பூரணமாக மறைக்க வேண்டும். ஆனால் அது கடும் இறுக்கமாக இருக்கமாக இருக்க கூடாது. பெண்களைப் பொறுத்தமட்டில் ஐந்து துண்டுகளில் அதாவது கீழாடை , தலையில் கட்டும் தண்டு, முழு ஆடைய கபனிடும் இரு துண்டு ஆகியவனையாகும். ஆண் குழுந்தைகளைப் பொறுத்தமட்டில் ஒரு துணி போதுமானது. என்றாலும் மூன்று துணி பாவிப்பது கூடும். பெண் குழந்தையை பொறுத்த வரை சட்டையும், இரண்டு துணிகளும் போதுமானது.

2- மூன்று துணிகளிலும் வாசனைத் திரவியத்தை பயன்படுத்துவது ஆகுமானது. நபியவர்கள் கூறினார்கள் «நீங்கள் மையத்தை கபனிடும் (வாசனைத் திரவியம்) போது ஒற்றைப் படைய்க நிறைவேற்றுங்கள்»
(ஆதாரம் இப்னு ஹிப்பான்)

3- துணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். அற்றில் கற்பூரம், வாசனைத் திரவம் போன்றவைகளை பூச வேண்டும். இஹ்றாம் கட்டிய ஒருவரானால் அவருக்கு வாசனைகள் எதுவும் பூசம் கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «அவர்களுக்கு மணம் பூச வேண்டும்»(ஆதாரம் புஹாரி)

துணிகளில் மணம் பூசுதல்

4- மையத்தை நேர்த்தியாக படுக்க வைப்பது அவசியமாகும். வலது புறம் இருந்து இடது புறமாகவும், இடது இருந்து வலமாகவும், அடுத்த அடுத்த பகுதிகளை கபனிட வேண்டும். தலைப்பகுதியில் முடிச்சுக்கள் போட வேண்டும். மையத்தை அடக்கம் செய்யும் போது முடிச்சுக்களை அவிழ்த்து விட வேண்டும்.

நேர்த்தியாக மையத்தை வைத்தல்

5- உடலின் அனைத்து பகுதிகளையும் மறைப்பது வாஜிபாகும். துணி இருந்து அவை உடலை மறைக் போதுமானதாக இல்லாது போனால் அதனை கொண்டு தலையை மறைக் வேண்டும். காலை இலைகளை (ராகத்தான பூமியில் முளைத்தவைகள்) கொண்டு மறைக்க வேண்டும். முஸ்அப் ரழி அவர்கள் மரணித்த போது நபியவர்கள் «அவரது தலையை மறைக்கும் படியும் அவர்களது காலை இலைகளை கொண்டு காலை மறைக்கும் படியும் ஏவினார்கள்» (ஆதாரம் புஹாரி).

அனைத்து உடலையும் மறைத்தல்.

6- இஹ்றாம் அணிந்த நிலையில் உள்ளவரை அதே ஆடையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும். அதில் ஆண்களுடய தலையை மறைப்பது கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «அவரை இலந்தை நீரை கொண்டு கழுவுங்கள். அவர்களை இரண்டு ஆடையால் கபனிடுங்கள். அவர்களுகைகு மணம் (மையத்தை கபனிடும் போது மணம் பூசுதல்.) பூச வேண்டாம். அவர்களுடைய தலையை மறைக்க (தலையை மறைக்காமல் விடுதல்) வேண்டாம். ஏனனில் நாளை மறுமையில் அவர் தப்பியா சுறியவராக எழுப்பப்படுவார் (லப்பைக அல்லாஹூம்ம லப்பைக் என கூறுதல்)»(ஆதாரம் புஹாரி)

ஜனாஸாத் தொழுகை

ஜனாஸாத் தொழுகையின் ருகுன்கள்

1- சக்தியுள்ளவர் எழுந்து நிற்றல்

2- நான்கு தக்பீர் கூறல்

3- பாத்திஹா ஓதுதல்

4- நபியவர்கள் மீது ஸலவாத் கூறுதல்

5- மய்யத்திற்காக பிரார்த்தித்தல்

6- ஒழுங்குற செய்தல்

7- ஸலாம் கொடுதல்

ஜனாஸா தொழுகையின் சுன்னத்கள்

1- ஓதுவதற்கு முன்னர் அஊது பில்லாஹி மினஸ் ஷைதானிர் ரஜீம் என கூறல்

2- முஸ்லிம்களுக்கு தனக்குள் துஆ செய்தல்

3- உள்ரங்கமாக ஓதுதல்

4- ஸப்புகளை அதிகரித்தல். மூன்று ஸப்புகள் அதிகமாக இருத்தல்.

ஜனாஸா தொழுகை நிறைவேற்றும் முறை

ஆண் மையத்தாக இருந்தால் இமாம் அதன் தலைப் பகுதியிலும். பெண் மையத்தாக இருந்தால் அதன் நடுப் பகுதியிலும் நிற்க வேண்டும். மஃமும்கள் இமாமிற்கு பின்னால் தொழுகையில் நிற்பது போன்று நிற்க வேண்டும். பின்னர் நான்கு ரக்அத்கள் கூறப்படும். அதில்

1- முதலாவது ரக்அத்தில். அது ஆரம்ப தக்பீராகும். அதில் அஊதி, பிஸ்மியுடன் பாத்திஹா ஓத வேண்டும்.

2- இரண்டாவது தக்பீரில் அத்தஹியாத்திக் இருதியில் ஓதுவது போன்று நபியவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.

3- மூன்றாவது தக்பீரில் தனக்காகவும், மையத்திற்காகவும், முஸ்லிம்களுக்காகவும் துஆ செய்ய வேண்டும். அதில் «அல்லாஹும்மபிர் லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி»(ஆதாரம் முஸ்லிம்) பெண் மையத்தாக இருப்பின் அதன் எழுவாயை பெண்ணாக மாற்றி ஓத வேண்டும். அது வேளை மரணித்த்து சிறு பிள்ளை அல்லது குறையில் (பூரணமாக உடலைபட பெறாமல் விழுந்த உடல்) விழுந்தது என்றால் நபியவர்கள் கூறினார்கள் «அல்லாஹம்ம அஜ்அலகு துஹ்ரன் லிவாலிதாஹி, வபரதன் (முற்படுத்தல்) வஅஜ்ரன், வஷபீஅன், முஜாபா»(ஆதாரம் புஹாரி) அல்லாஹூம்ம தகில் மவாஸீனகுமா, அஃழம் பிஹி அஜூரஹூமா, அவ் அல்கஹஹூ பிஸாலிஹி ஸலபில் முஃமினின், வஜ்அலது பி கபாலதில் இப்றாஹீம். வக்ஹூ பிரஹ்மதிக அதாப ஜஹீம்.

4- நான்காவது தக்பீரில் சிறுது நேரம் அமைதியாக இருந்து வலது பக்கம் ஒரு முறை ஸலாம் கொடுப்பார். அல்லது இரு பக்கமும் கொடுப்பார்.

மையத்தை சுமந்து செல்லல், அதனை அறிவித்தல், நல்லடக்கம் செய்தல்

ஜனாவுக்கு தொழகை நடாத்திய பின்னர் உடனடியாக அதனை அடக்கம் செய்வது சுன்னாவாகும். ஜனாஸாவில் கலந்து கொண்டவர் சுமந்து செல்வது ஆகுமானது. கப்ரில் இறங்குபவர் «பிஸ்மில்லா அலா மில்லதி ரசூலில்லாஹ்»
(ஆதாரம் திர்மிதி) என கூறியவாக குழிக்குள் (பூமியில் ஆழமாக தோண்டப்படும் குழி) வலது பக்கமா உடலையும் முகத்தையும் கிப்லாபை நோக்கி வைப்பார். பின்னர் கபனின் மூடிச்சை அவிழ்த்து விடுவார். பின்னர் மண்ணால் குழியை மூடி விடுவார்.

அடக்கம் செய்ய வருவர் மூன்று முறை கைகளால் மண்ணை போடுவது சுன்னாவாகும். மண்ணால் மூடி பூமியில் இருந்து சற்று உயர்த்தி இருக்க வேண்டும். அதன் மீது கம்போ அல்லது கல்லோ வைக்க வேண்டும். தண்ணீர் தெளிக்க வேண்டும். அடையாளத்திற்காக கப்றின் ஓரங்களில் கற்களை வைப்பதில் பிரச்சினையில்லை.

ஆறுதல் கூறல்.

பெறுமையை கடைப்பிடிப்பதற்கும், அவர்களது சோதனை நீங்கவும் மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறுவது ஆகுமானது. «லில்லாஹி மா அஹத, வலகு மா அஃதா, வலிகுல்லி ஷையின் இன்தகு பிஅஜ்லின் முஸம்மா பலிதஸ்பிர், வலிதஹ்தஸிப்” இன்னும் “அஃழம அல்லாஹூ அஜ்ரக வஅஹ்ஸன அஸாஅக, வகபர லிமய்யதிக»
(ஆதாரம் புஹாரி)

ஜனாஸாவை தூக்குவதில் பங்கேற்றல்

குழி

கப்ரில் மண் போடுதல்.

கப்றில் அடையாளம் வைத்தல்.

ஜனாஸாவுடன் பெண்கள் செல்வது

ஜனாஸாவுடன் பெண்கள் செல்வது மார்க்கம் காட்டித்தராத ஒன்றாகும். உம்மு அதிய்யா ரழி அறிவிக்கிறார்கள் ஜனாஸாவை பித் தொடர்வதற்கு நாங்கள் தடுக்கப்பட்டோம். அதே போல அது எங்களுக்கு கடமையாக்கப்படவில்லை»(இப்னு மாஜா)

கப்றை தரிசித்தல்

மைய்யத்திற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். எனும் நோக்கில் மண்ணறைகளை தரிசிப்பது சுன்னாவாகும். நபியவர்கள் கூறினார்கள். «நபியர்கள் கப்றுகளை தரிசிப்பதை எங்களுக்கு தடுத்தார்கள். பின்னர் மறுமையை ஞாபகம் ஊட்டும் என்பதால் அதனை சரிசிக்கச் சொன்னார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

கப்றுகளை தரிசிக்கும் போது ஓத வேண்டிய துஆ

«அஸ்ஸலாமு அலைக்கும் தாரு கவ்மி முஃமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹி பிகும் லாஹிகூன். (ஆதாரம் முஸ்லிம்) அல்லது அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியார் மினல் முஃமினீன, வல் முஸ்லிமீன். வயர்ஹமுல்லாஹூ முஸ்தக்திமீன் மின்னா முஸ்தஃஹிரீன். வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன்.
(ஆதாரம் முஸ்லிம்) “அஸ்அலுல்லாஹூ லனா வலகும் அல்ஆபியா»(ஆதாரம் முஸ்லிம்)

அவர்களுக்காக்க பாவமன்னிப்பு, அருள் செய்யம்படியும் நாம் கேட்கலாம்.

ஜனாஸாவில் தடுக்கப்பட்டவைகள்

1- சத்தமிட்டு ஓலமிட்டு அழுதல். (சத்தத்தை உயர்த்தி ஒப்பாரி வைத்தல்) அல்லாஹ்வின் நாட்டத்தை திட்டியவராக ஒப்பாரி வைத்தல்«என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றை (இலேசில்) கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரக(மாற்ற)ங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரினால் ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள் (துணி)” என்று நபி (ஸல்) கூறினார்கள்.»(ஆதாரம் முஸ்லிம்)

2- கண்ணங்களில் அடித்து, ஆடையை கிழித்து, முடியை பிய்த்து ஓலமிடுதல்.. «(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.»
(ஆதாரம் முஸ்லிம்)

கப்றில் ஒளி ஏற்றுவது, நிறம் பூசுவது கூடாது.

3- மண்ணறைகளில் தீபம் ஏற்றுதல்«கப்றுகளை தரிசிக்கும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள். அதன் மீது பள்ளிகட்டுவதையும், ஒளியூட்டுவதையும் (ஒளி விளக்குகள்) தடுத்தார்கள்.» (ஆதாரம் திர்மிதி)

4- கப்ரின் மீது உட்காருதல், அதற்கு வர்ணம் அடித்தல், அதன் மீது கட்டு கட்டுதல்«கப்றுகளை கல்லறையாக்குவதையும் (நிறம் தீட்டுதல்) அதன் மீது கட்டடம் கட்டுவதையும், அதில் உட்காருவதையும் தடுத்தார்கள்» (ஆதாரம் முஸ்லிம்)

5- கப்ருகளிடம் பரகத் வேண்டுதல், அதனை தவாப் செய்தல் கப்றுகளிடத்தில் துஆ கேட்டல் போன்றன ஷிர்க் ஆகும். அல்லாஹ் கூறுகிறான். {(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை}[அஃராப் – 188]

கப்றில் தவாப் செய்வது கூடாது

6- பள்ளியில் அடக்கம் செய்வது, அடக்கம் செய்யப்படும் இடத்தில் பள்ளி கட்டுவது, அங்கு தொழுவது போன்றன கூடாது. நபியவர்கள் கூறினார்கள்.« யூத கிறிஸ்தவர்கள் மீது சாபம் உண்டாவதாக அவர்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டனர். » (ஆதாரம் புஹாரி)

ஜனாஸாவின் சட்டங்களில் உள்ளவைகள்

1- ஜனாஸாத் தொழுகையை ஒருவர் தவற விட்டால் அவர் அடக்குவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தொழுது கொள்ள் முடியும். நபியவர்கள் பள்ளியை சுத்தம் செய்யும் பெண் மரணித்த செய்தியை அறிந்த போது அவருடைய கப்றடியே தொழுதார்கள்.
(ஆதாரம் புஹாரி)

மரணித்தவருக்காக உணவு தயாரித்தல்

2- மரணித்தவரின் குடும்பத்திற்கு உணவுகளை தயார்படுத்திக் கொடுப்பது ஆகுமானதாகும். அவர்கள் உணவு தயாரிப்பதிலிருந்து கவலையில் மூழ்கியிருப்பர். ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்த செய்தியை நபி அவர்கள் மக்களுக்கு அறிவித்து விட்டு, «ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள். ஏனெனில் சமைத்து உண்ணுவதை விட்டும் பராக்காக்கி விடக்கூடிய விடயம் அவர்களுக்கு நடந்துள்ளளது.” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: (அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹுமா) »
(ஆதாரம் புஹாரி).

3- சத்தத்தை உயர்த்தாமல், ஒப்பாரி வைக்காமல் அமைதியாக அழ முடியும். நபியவர்களுடைய மகன் மரணித்த போது நபியவர்கள் «‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்’ என்றார்கள்»(ஆதாரம் அபூதாவுத்)

4- போரில் மரணித்தவரை குளிப்பாட்டாமல் அப்படியே அடக்கம் செய்ய வேண்டும். அவருக்கு தொழுகை நடத்த தேவையில்லை. «நபியவர்கள் ஷஹீத்களை இரத்தத்தோடு குளிப்பாட்டாமல் அடக்கம் செய்யுமாறு ஏவினார்கள்»(ஆதாரம் புஹாரி)

5- ஹஜ் உம்ராவில் இருப்பவர் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தால் அவரை குளிப்பாட்ட வேண்டும். மணம் பூசக் கூடாது. அவருடைய தலையை மறைக்க கூடாது. அவருக்கு தொழுகை நடத்த வேண்டும். ஹஜ்ஜில் இஹ்ராமோடு மரணித்தவருக்கு நபியவர்கள் கூறினார்கள் «இலந்தை நீரால் அவரை குளிப்பாட்டி, இரண்டு துணியால் கபனிடுங்கள், அவரது தலையை மறைக்க வேண்டாம். அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக வருவார்» (ஆதாரம் புஹாரி)

ஷஹீதை அவரது ஆடையுடனே அடக்குதல்